205. அரத்துறையப்பர் கோயில்
இறைவன் அரத்துறையப்பர், தீர்த்தபுரீஸ்வரர்
இறைவி ஆனந்த நாயகி, திரிபுரசுந்தரி
தீர்த்தம் வெள்ளாறு
தல விருட்சம் ஆலமரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருநெல்வாயில்அரத்துறை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. பெண்ணாடம், விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆவினன்குடி, இறையூர் கடந்து கொடிகளம் என்னும் ஊரில் 'திருவட்டத்துறை' கைகாட்டி காட்டும் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. ஊருக்குள் செல்ல வேண்டும். பெண்ணாடகத்திலிருந்து 4 கி.மீ. பெண்ணாடம் இரயில் நிலையத்துக்கு தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

TirunelvayilGopuramசப்தரிஷிகள் வழிபட்ட தலம். தற்போது வெள்ளாறு என்று அழைக்கப்படும் 'நிவா' நதியின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. சப்தரிஷிகள் ஏழு துறைகளை வணங்குவதற்கு 'நீ வா' என்று அழைத்ததால் இந்த 'நீவா' என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் மருவி 'நிவா' நதி என்று மாறியது. நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் கோயிலுக்கு சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தனது தலையைச் சற்றுத் திருப்பி வெள்ளத்தைப் பார்க்க, அதனால் வெள்ளம் வடிந்ததாக தலவரலாறு தெரிவிக்கிறது.

TirunelvayilUtsarஅழகிய சிறிய கோயில். கோஷ்ட மூர்த்திகளின் வடிவங்கள் மிகவும் அழகாக உள்ளன. சம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களும் அளித்த தலம். வெளிபிரகாரத்தின் பின்புறத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயரில் லிங்கங்கள் உள்ளன.

Santhana Kuravargalஇங்கு வால்மீகி முனிவருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் சமயக் குரவர்களுக்கு சன்னதி இருப்பதுபோல் சந்தானக் குரவர்களான மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.

TirunelvayilNandhiசம்பந்தர், அப்பர், சுந்தரர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப்பெருமானைப் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com